×

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: வரும் 3, 4 மற்றும் 5ம் தேதி முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன்படி தினசரி இயக்கக்கூடிய பேருந்து களுடன் 3ம் தேதி 290 பேருந்துகளும், 4ம் தேதி 365 பேருந்துகளும் மற்றும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3 மற்றும் 4ம் தேதி 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது . வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5827 பயணிகளும் சனிக்கிழமை 3831 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 6522 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

எனவே, நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in < http://www.tnstc.in > மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம்.

The post முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மேலாண் இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mukurtam ,CHENNAI ,State Transport Corporation ,Mukurtham ,Klambakum ,Tiruvannamalai ,Trichy ,Kumbakonam ,Madurai ,Tirunelveli ,Nagercoil ,Kanyakumari ,Thoothukudi ,Coimbatore ,Ninditu ,Dinakaran ,
× RELATED முகூர்த்தம், வார இறுதி நாட்களை...